தியாக தீபம் திலீபனுக்கு வவுனியாவில் சிலை வைப்பதற்கு இடம் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வவுனியா வர்த்தகரான எஸ். சிவரூபன் வவுனியா மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.
இதன்பின் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தகர்,
இன்று அவரால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில்,
தமிழர்களுக்காக, உன்னத இலட்சியத்திற்காக பல நாட்களாக பசி இருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அண்ணாவுக்கு சிலை வைப்பதற்கு வவுனியாவில் இடம் ஒன்றினை ஒதுக்கித்தருங்கள் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தினை ஏற்றுக்கொண்ட மாநகர முதல்வர் சு. காண்டீபன், குறித்த சிலையினை வைப்பதற்கு இடம்கோரி தங்களால் தரப்பட்ட இக்கடிதத்தினை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாகவும், அத்தோடு இந்த கோரிக்கையை விடுக்கும் தாங்கள் வேறு சில நடைமுறைகளும் இருப்பதன் காரணமாக அதனையும் செயல்படுத்தி தமக்கு அந்த ஆவணங்களையும் பெற்றுத் தருமாறும் தெரிவித்திருந்தார்.
வவுனியாவில் தியாகி திலீபனுக்கு சிலை மாநகர முதல்வரிடம் கடிதம் மூலம் கோரிக்கை தியாக தீபம் திலீபனுக்கு வவுனியாவில் சிலை வைப்பதற்கு இடம் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வவுனியா வர்த்தகரான எஸ். சிவரூபன் வவுனியா மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.இதன்பின் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தகர், இன்று அவரால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில்,தமிழர்களுக்காக, உன்னத இலட்சியத்திற்காக பல நாட்களாக பசி இருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அண்ணாவுக்கு சிலை வைப்பதற்கு வவுனியாவில் இடம் ஒன்றினை ஒதுக்கித்தருங்கள் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடிதத்தினை ஏற்றுக்கொண்ட மாநகர முதல்வர் சு. காண்டீபன், குறித்த சிலையினை வைப்பதற்கு இடம்கோரி தங்களால் தரப்பட்ட இக்கடிதத்தினை மாநகர சபை அமர்வில் முன்வைப்பதாகவும், அத்தோடு இந்த கோரிக்கையை விடுக்கும் தாங்கள் வேறு சில நடைமுறைகளும் இருப்பதன் காரணமாக அதனையும் செயல்படுத்தி தமக்கு அந்த ஆவணங்களையும் பெற்றுத் தருமாறும் தெரிவித்திருந்தார்.