• Aug 09 2025

வீடொன்றில் தீ விபத்து சிறுவன் உயிரிழப்பு; தாய், தந்தையருக்கு காயமில்லை - பொலிஸார் தீவிர விசாரணை!

shanuja / Aug 9th 2025, 7:14 pm
image

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

  

இந்தச் சம்பவம் பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (9) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 



குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் தீப்பிடித்துள்ளது என்று பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது. 


தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர். 


சம்வத்தின் போது உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை வீட்டில் இருந்துள்ளனர். எனினும்  தீ விபத்தில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதனால் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 


சிறுவனின் தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்து வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


மேலும், சிறுவனின் தாய் வேறொரு நபருடன் திருமணத்திற்கு அப்பாலான உறவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


இருப்பினும், நேற்று (8) இரவு குறித்த பெண் வீடு திரும்பியபோது ஏதோ ஒரு தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை பலாங்கொடை பதில் நீதவான் மேற்கொள்ளவுள்ளதோடு, சிறுவனின் சடலம் மீதான உடற்கூற்றுப்  பரிசோதனை பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் தீ விபத்து சிறுவன் உயிரிழப்பு; தாய், தந்தையருக்கு காயமில்லை - பொலிஸார் தீவிர விசாரணை வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இந்தச் சம்பவம் பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (9) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் தீப்பிடித்துள்ளது என்று பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர். சம்வத்தின் போது உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை வீட்டில் இருந்துள்ளனர். எனினும்  தீ விபத்தில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதனால் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். சிறுவனின் தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்து வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறுவனின் தாய் வேறொரு நபருடன் திருமணத்திற்கு அப்பாலான உறவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், நேற்று (8) இரவு குறித்த பெண் வீடு திரும்பியபோது ஏதோ ஒரு தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை பலாங்கொடை பதில் நீதவான் மேற்கொள்ளவுள்ளதோடு, சிறுவனின் சடலம் மீதான உடற்கூற்றுப்  பரிசோதனை பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement