• Jul 07 2026

எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் அதிரடியாக நீக்கம்

Chithra / Jul 7th 2026, 2:52 pm
image

 

எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.


இது தொடர்பான சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், ஆணையங்கள், அரச திணைக்களங்கள், மாவட்டச் செயலகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.


மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வு மற்றும் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.


இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அதிகாரிகளுக்கான எரிபொருள் படிகள், மார்ச் 1ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


எனினும், புதிய சுற்றறிக்கையின் மூலம் அந்த உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கான எரிபொருள் படிகள் சந்தையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையின் அடிப்படையில் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் அதிரடியாக நீக்கம்  எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், ஆணையங்கள், அரச திணைக்களங்கள், மாவட்டச் செயலகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வு மற்றும் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அதிகாரிகளுக்கான எரிபொருள் படிகள், மார்ச் 1ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.எனினும், புதிய சுற்றறிக்கையின் மூலம் அந்த உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கான எரிபொருள் படிகள் சந்தையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையின் அடிப்படையில் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement