• Jun 19 2026

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

Chithra / Jun 18th 2026, 9:17 pm
image


காலி, கரந்தெனிய பிரதேசத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக் கோர வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற காலி - ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.


எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த காருடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அதன் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவத்தின் போது காரைச் செலுத்தி வந்த 26 வயதுடைய இளைஞர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம் காலி, கரந்தெனிய பிரதேசத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக் கோர வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற காலி - ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த காருடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அதன் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவத்தின் போது காரைச் செலுத்தி வந்த 26 வயதுடைய இளைஞர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement