• Jun 26 2026

O/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 8 வரை மட்டுமே அவகாசம்!

Chithra / Jun 26th 2026, 10:06 am
image


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களைக் ஒன்லைன் (Online) முறைமை ஊடாகத் திணைக்களம் கோரியுள்ளது.


இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஜூன் 25 முதல் ஜூலை 8ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk இன் "Exam Information Centre" பகுதிக்குச் செல்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி மூலமோ விண்ணப்பிக்கலாம்.


ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் 2025 சாதாரண தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய பரீட்சை சுட்டெண் (Index number) மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், புதியவர்கள் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பதிவிட்டுப் பதிய வேண்டும்.


ஒரு பாடத்திற்கான மறுபரிசீலனை கட்டணம் 200 ரூபாய் என்பதுடன், இதனை கடன், வரவு அட்டைகள் அல்லது தபால் அலுவலகம் மூலம் செலுத்தலாம். ஒரு பரீட்சார்த்தி ஒரு விண்ணப்பத்தை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என்பதால், அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து விண்ணப்பிக்குமாறும், கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


O/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 8 வரை மட்டுமே அவகாசம் 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களைக் ஒன்லைன் (Online) முறைமை ஊடாகத் திணைக்களம் கோரியுள்ளது.இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஜூன் 25 முதல் ஜூலை 8ஆம் திகதி வரை ஒன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சார்த்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk இன் "Exam Information Centre" பகுதிக்குச் செல்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைய முகவரி மூலமோ விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் 2025 சாதாரண தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய பரீட்சை சுட்டெண் (Index number) மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், புதியவர்கள் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பதிவிட்டுப் பதிய வேண்டும்.ஒரு பாடத்திற்கான மறுபரிசீலனை கட்டணம் 200 ரூபாய் என்பதுடன், இதனை கடன், வரவு அட்டைகள் அல்லது தபால் அலுவலகம் மூலம் செலுத்தலாம். ஒரு பரீட்சார்த்தி ஒரு விண்ணப்பத்தை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என்பதால், அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து விண்ணப்பிக்குமாறும், கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement