நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்ஃபி தோட்டத்தில் இன்று (11) குளவிகள் தாக்கியதில் 11 தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூட்டை வேட்டையாடுவதற்காக பருந்தொன்று தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குளவிகள் கலைந்து வந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவித் தாக்குதலில் காயமடைந்த 11 பேரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 8 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் மூவர் வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குளவிக்கூட்டை தாக்கிய பருந்து: 11 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்ஃபி தோட்டத்தில் இன்று (11) குளவிகள் தாக்கியதில் 11 தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூட்டை வேட்டையாடுவதற்காக பருந்தொன்று தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து குளவிகள் கலைந்து வந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குளவித் தாக்குதலில் காயமடைந்த 11 பேரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் 8 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் மூவர் வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.