கல்கிஸை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் உயிர்காக்கும் பொலிஸ் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ளார்.
கல்கிஸை கடற்கரையில் ஒருவர் நேற்று (29) குளிக்கச் சென்றுள்ளார். அப்போது பலத்த நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தைக் கண்டதும், அப்போது பணியில் இருந்த கல்கிஸை பொலிஸ்பிரிவின் உயிர்காக்கும் படையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சில மணிநேரங்களுக்குப் பின்னர் குறித்த இளைஞர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டார் என்று பொலிஸ்பிரிவின் உயிர்காக்கும் படையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இளைஞர் யக்வில், எரியகொல்ல பகுதியைச் சேர்ந்த நபர் 22 வயது இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரைக்குச் செல்பவர்கள், குறிப்பாக காலநிலை சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டு கடலுக்கு நீந்தச் செல்லுமாறும் கடலில் நீந்தும்போது எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கல்கிஸை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் பாதுகாப்பாக மீட்பு கல்கிஸை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் உயிர்காக்கும் பொலிஸ் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ளார். கல்கிஸை கடற்கரையில் ஒருவர் நேற்று (29) குளிக்கச் சென்றுள்ளார். அப்போது பலத்த நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தைக் கண்டதும், அப்போது பணியில் இருந்த கல்கிஸை பொலிஸ்பிரிவின் உயிர்காக்கும் படையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.சில மணிநேரங்களுக்குப் பின்னர் குறித்த இளைஞர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டார் என்று பொலிஸ்பிரிவின் உயிர்காக்கும் படையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இளைஞர் யக்வில், எரியகொல்ல பகுதியைச் சேர்ந்த நபர் 22 வயது இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரைக்குச் செல்பவர்கள், குறிப்பாக காலநிலை சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டு கடலுக்கு நீந்தச் செல்லுமாறும் கடலில் நீந்தும்போது எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.