• Jul 09 2026

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறை! வெளியான வர்த்தமானி

Chithra / Jul 9th 2026, 9:28 am
image


பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். 


அதற்கிணங்க, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பழைய போகம்பர வளாகம் ஒரு சிறைச்சாலையாகச் செயல்படும்.


சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2-ன் மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இதேவேளை, காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் நேற்று முன்தினம் (07) மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது. 


பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறை வெளியான வர்த்தமானி பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். அதற்கிணங்க, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பழைய போகம்பர வளாகம் ஒரு சிறைச்சாலையாகச் செயல்படும்.சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2-ன் மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் நேற்று முன்தினம் (07) மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது. 

Advertisement

Advertisement

Advertisement