• Jun 22 2025

முச்சக்கர வண்டி விபத்து; கணவர் உயிரிழப்பு – மனைவி படுகாயம்!

shanuja / Jun 22nd 2025, 12:15 am
image

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  இடம்பெற்ற முச்சக்கரவண்டி  விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்துள்ளார் என்று நிலாவொளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


திரியாயில் இருந்து திருகோணமலை நோக்கி மூன்று பேருடன் பயணித்த முச்சக்கர வண்டி, நிலாவெளி பகுதியில் விபத்துக்குள்ளானது.


விபத்தில் திரியாய் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்க நடராசா (வயது 72) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


விபத்து தொடர்பாக நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முச்சக்கர வண்டி விபத்து; கணவர் உயிரிழப்பு – மனைவி படுகாயம் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  இடம்பெற்ற முச்சக்கரவண்டி  விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்துள்ளார் என்று நிலாவொளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திரியாயில் இருந்து திருகோணமலை நோக்கி மூன்று பேருடன் பயணித்த முச்சக்கர வண்டி, நிலாவெளி பகுதியில் விபத்துக்குள்ளானது.விபத்தில் திரியாய் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்க நடராசா (வயது 72) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து தொடர்பாக நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement