கடந்த ஆண்டு வேல்ஸ் தலைநகரான கார்டிஃப்பில் தெருவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இலங்கைப் பெண்ணின் கொலை வழக்கில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திசர வெரகலகே (37) என்பவர், நிவுன்ஹெல்லகே டோனா நிரோதா கலாப்னி நிவுன்ஹெல்லாஎன்ற இலங்கைப் பெண்ணை கொலை செய்ததை, திங்கள்கிழமை நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.
2025 ஆகஸ்ட் 21 அன்று, கார்டிஃப்பின் ரிவர்சைடு பகுதியில் உள்ள தெற்கு மோர்கன் பிளேஸில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையில், நிரோதா பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
பென்ட்வின் பகுதியைச் சேர்ந்த வெரகலகே, முன்னதாக கொலை குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இருப்பினும், சமீபத்திய நீதிமன்ற விசாரணையின் போது தனது வாக்குமூலத்தை மாற்றி, குற்றவாளி என ஒப்புக்கொண்டார். மேலும், கத்தி அல்லது முனையுள்ள பொருளை வைத்திருந்ததையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
பிரேத பரிசோதனையில், நிரோதாவின் மரணம் பல கூர்மையான காயங்களால் ஏற்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைக்குப் பிறகு வெரகலகே காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிப்ரவரி 20 அன்று அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
நிரோதாவின் மரணத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
அவரது குடும்பத்தினர் அவரை “அன்பான மகள், குடும்ப உறுப்பினர் மற்றும் நெருங்கிய தோழி” என வர்ணித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக வெரகலகே கைது செய்யப்பட்டுள்ளார்.
வேல்ஸில் இலங்கைப் பெண் கொலை- குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையைச் சேர்ந்த நபர் கடந்த ஆண்டு வேல்ஸ் தலைநகரான கார்டிஃப்பில் தெருவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இலங்கைப் பெண்ணின் கொலை வழக்கில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திசர வெரகலகே (37) என்பவர், நிவுன்ஹெல்லகே டோனா நிரோதா கலாப்னி நிவுன்ஹெல்லாஎன்ற இலங்கைப் பெண்ணை கொலை செய்ததை, திங்கள்கிழமை நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.2025 ஆகஸ்ட் 21 அன்று, கார்டிஃப்பின் ரிவர்சைடு பகுதியில் உள்ள தெற்கு மோர்கன் பிளேஸில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையில், நிரோதா பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.பென்ட்வின் பகுதியைச் சேர்ந்த வெரகலகே, முன்னதாக கொலை குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இருப்பினும், சமீபத்திய நீதிமன்ற விசாரணையின் போது தனது வாக்குமூலத்தை மாற்றி, குற்றவாளி என ஒப்புக்கொண்டார். மேலும், கத்தி அல்லது முனையுள்ள பொருளை வைத்திருந்ததையும் அவர் ஏற்றுக்கொண்டார்.பிரேத பரிசோதனையில், நிரோதாவின் மரணம் பல கூர்மையான காயங்களால் ஏற்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.விசாரணைக்குப் பிறகு வெரகலகே காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிப்ரவரி 20 அன்று அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.நிரோதாவின் மரணத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில்,அவரது குடும்பத்தினர் அவரை “அன்பான மகள், குடும்ப உறுப்பினர் மற்றும் நெருங்கிய தோழி” என வர்ணித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக வெரகலகே கைது செய்யப்பட்டுள்ளார்.