• Jul 06 2025

பொரளையில் துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் கைது –விசாரணை தீவிரம்!

Thansita / Jul 5th 2025, 8:26 am
image

பொரளை பொலிஸ் பிரிவில் கடந்த ஜூன் 4 ஆம் திகதி இடம்பெற்ற T56 துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், சம்பவத்தில் முக்கிய வகை உதவியாளர்களாக இருந்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்களில் ஒருவர் இந்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் பொரளை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். 

இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவும், பொரளை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

பொரளையில் துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் கைது –விசாரணை தீவிரம் பொரளை பொலிஸ் பிரிவில் கடந்த ஜூன் 4 ஆம் திகதி இடம்பெற்ற T56 துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள், சம்பவத்தில் முக்கிய வகை உதவியாளர்களாக இருந்ததாக கூறப்படுகிறது.சந்தேகநபர்களில் ஒருவர் இந்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருவரும் பொரளை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவும், பொரளை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement