• Apr 15 2026

கடும் மின்னல் தொடர்பில் அவசர எச்சரிக்கை

Chithra / Feb 14th 2026, 12:51 pm
image


மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களுக்கு  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இன்று (14) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும். 


அதன்படி, மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கடும் மின்னல் தொடர்பில் அவசர எச்சரிக்கை மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களுக்கு  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும். அதன்படி, மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement