• Jun 15 2025

மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன்! இலங்கையில் கோர சம்பவம்

Chithra / Jun 15th 2025, 8:51 am
image


மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார். 

நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

இறந்தவர் மெகதம மக்கெந்தவின்ன பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

குடும்ப தராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்குப் பின் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் சந்தேக நபரைக் கைது செய்ய மேதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன் இலங்கையில் கோர சம்பவம் மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார். நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இறந்தவர் மெகதம மக்கெந்தவின்ன பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது. குடும்ப தராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.கொலைக்குப் பின் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் சந்தேக நபரைக் கைது செய்ய மேதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement