• Jun 26 2025

இலங்கையை வந்தடைந்தார் கீதா கோபிநாத்

Chithra / Jun 15th 2025, 11:57 am
image


சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

அவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விஜயத்தில் நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது: கடன் மற்றும் நிர்வாகம்" என்ற தலைப்பில், 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் இலங்கை அதிகாரிகளுடனும், இலங்கை - சர்வதேசநாணய நிதியம் ஆகியவற்றிற்கு இடையிலான ஈடுபாட்டுடன் தொடர்புபட்டவர்களுடனும் கீதா கோபிநாத் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.




இலங்கையை வந்தடைந்தார் கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தில் நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது: கடன் மற்றும் நிர்வாகம்" என்ற தலைப்பில், 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.மேலும் இலங்கை அதிகாரிகளுடனும், இலங்கை - சர்வதேசநாணய நிதியம் ஆகியவற்றிற்கு இடையிலான ஈடுபாட்டுடன் தொடர்புபட்டவர்களுடனும் கீதா கோபிநாத் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now