காத்தான்குடியில் ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனே காலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆற்றங்கரை பகுதியை நோக்கி தனியாக நடந்து சென்றுள்ள நிலையில், அங்கு தவறிய சிறுவன் நீரில் வீழ்ந்துள்ளார்.
இதற்கிடையில் சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் பொது மக்களுடன் இணைந்து தேடி வந்துள்ளனர்.
இதன்போது காத்தான்குடி ஆற்றங்கரை அண்மித்த பகுதியில் காணப்பட்ட சிசிடிவி கமெராவில் சிறுவன் தனியாக நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதனை வைத்து பிரதேச இளைஞர்கள் ஆற்றில் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு - காத்தான்குடியில் துயரம் காத்தான்குடியில் ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனே காலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.ஆற்றங்கரை பகுதியை நோக்கி தனியாக நடந்து சென்றுள்ள நிலையில், அங்கு தவறிய சிறுவன் நீரில் வீழ்ந்துள்ளார்.இதற்கிடையில் சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் பொது மக்களுடன் இணைந்து தேடி வந்துள்ளனர்.இதன்போது காத்தான்குடி ஆற்றங்கரை அண்மித்த பகுதியில் காணப்பட்ட சிசிடிவி கமெராவில் சிறுவன் தனியாக நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இதனை வைத்து பிரதேச இளைஞர்கள் ஆற்றில் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.