• Apr 14 2026

கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

Chithra / Apr 14th 2026, 10:16 am
image

கொள்ளுப்பிட்டி, சீ.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் சாரக்கட்டு மூலம் இரும்புப் பாகம் ஒன்றைப் பொருத்த முயன்றபோது, கால் வழுக்கி விழுந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து  கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு கொள்ளுப்பிட்டி, சீ.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் சாரக்கட்டு மூலம் இரும்புப் பாகம் ஒன்றைப் பொருத்த முயன்றபோது, கால் வழுக்கி விழுந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து  கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement