• Jun 06 2025

அரச நியமனம் வழங்காது பணியில் அமர்த்தப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா? அர்ச்சுனா கேள்வி...!

shanuja / Jun 5th 2025, 12:43 pm
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச நியமனம் வழங்காது 3 வருட காலத்துக்கு  சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா? இல்லை பெற்றுக்கொடுக்க முடியுமா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வியில் தெரிவிக்கையில்,  


இலங்கையிலே யாழ்ப்பாணம் அல்ல பேராதனை வைத்தியசாலையில் நான் 3 வருடங்கள் வேலை செய்தேன். அரசாங்கம் ஒரு நியமனத்தைக் கொடுக்காமல் எந்தவொரு வைத்தியசாலையிலும் வேலை செய்ய முடியாது. இவர்களின் தொழிலின் அடிப்படையிலே இவர்கள் 3 வருடங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிக்கின்றார்கள். 


அமர்த்தப்பட்ட வேலைக்குரிய காலத்தினுடைய புத்தகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய பதிவுகள் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். தங்களால் அவர்களுடைய அந்த 3  வருட காலத்திற்குரிய அதாவது மொத்தமாக 36 மாத கால அந்த வேலைக்குரிய பணத்தை நோயாளர் நலன்புரி சங்கத்தினூடாக  பெற்றுக்கொள்ள முடியுமா? பெற்றுக்கொடுக்க முடியுமா? - எனக் கேள்வியெழுப்பினார். 


அதற்குப் பதிலளித்த சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி,


உண்மையில் நான் தெனிவுபடுத்தியிருந்தேன். அவர்கள் தன்னார்வ முறையில் தான் பணியாற்றியிருக்கின்றார்கள் என்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல. வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் கூட  இந்தப்பிரச்சினை இருக்கின்றது. ஆனால்  இவ்வளவு எண்ணிக்கையான தன்னார்வ ஊழியர்கள் வேறு எந்தவொரு வைத்தியசாலைகளிலும் சேர்க்கப்படவில்லை. இது தான் பிரச்சினை. சம்பளம் வழங்கியிருப்பது இங்குடைய எல்லைக்கு அப்பால். ஏதாவது என்ஜியோ சம்பளம் வழங்கியதோ தெரியவில்லை. எவ்வாறென்றாலும் எதிர்காலத்தில் நாங்கள் வேலைவாய்ப்புக்களை வழங்குகின்ற போது அவர்களுக்கு முன்னுரிமையை வழங்குவோம். ஆனாலும்  அவர்களுக்கான கடந்த காலத்துக்கான சம்பளத்தை வழங்குவதற்கான  சட்ட ஏற்பாடுகள் இல்லை.- என்றார்.

அரச நியமனம் வழங்காது பணியில் அமர்த்தப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா அர்ச்சுனா கேள்வி. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச நியமனம் வழங்காது 3 வருட காலத்துக்கு  சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா இல்லை பெற்றுக்கொடுக்க முடியுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார். அவர் எழுப்பிய கேள்வியில் தெரிவிக்கையில்,  இலங்கையிலே யாழ்ப்பாணம் அல்ல பேராதனை வைத்தியசாலையில் நான் 3 வருடங்கள் வேலை செய்தேன். அரசாங்கம் ஒரு நியமனத்தைக் கொடுக்காமல் எந்தவொரு வைத்தியசாலையிலும் வேலை செய்ய முடியாது. இவர்களின் தொழிலின் அடிப்படையிலே இவர்கள் 3 வருடங்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிக்கின்றார்கள். அமர்த்தப்பட்ட வேலைக்குரிய காலத்தினுடைய புத்தகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய பதிவுகள் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளன. தனித்தனியாக அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். தங்களால் அவர்களுடைய அந்த 3  வருட காலத்திற்குரிய அதாவது மொத்தமாக 36 மாத கால அந்த வேலைக்குரிய பணத்தை நோயாளர் நலன்புரி சங்கத்தினூடாக  பெற்றுக்கொள்ள முடியுமா பெற்றுக்கொடுக்க முடியுமா - எனக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி,உண்மையில் நான் தெனிவுபடுத்தியிருந்தேன். அவர்கள் தன்னார்வ முறையில் தான் பணியாற்றியிருக்கின்றார்கள் என்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல. வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் கூட  இந்தப்பிரச்சினை இருக்கின்றது. ஆனால்  இவ்வளவு எண்ணிக்கையான தன்னார்வ ஊழியர்கள் வேறு எந்தவொரு வைத்தியசாலைகளிலும் சேர்க்கப்படவில்லை. இது தான் பிரச்சினை. சம்பளம் வழங்கியிருப்பது இங்குடைய எல்லைக்கு அப்பால். ஏதாவது என்ஜியோ சம்பளம் வழங்கியதோ தெரியவில்லை. எவ்வாறென்றாலும் எதிர்காலத்தில் நாங்கள் வேலைவாய்ப்புக்களை வழங்குகின்ற போது அவர்களுக்கு முன்னுரிமையை வழங்குவோம். ஆனாலும்  அவர்களுக்கான கடந்த காலத்துக்கான சம்பளத்தை வழங்குவதற்கான  சட்ட ஏற்பாடுகள் இல்லை.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement