• Jun 06 2025

இளைப்பாற அமர்ந்த தாய்மார்களை விரட்டிய வியாபாரி! தட்டிக்கேட்ட மக்கள் பிரதிநிதிகள்! யாழ் செம்மணியில் சம்பவம்

Chithra / Jun 5th 2025, 12:46 pm
image

  

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி யாழில் இன்று போராட்டம்  இடம்பெற்றது.  

இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் அங்கிருந்த பழக் கடைக்கு அருகில் இருந்த வேளை பழக்கடையை நடத்தும் இளைஞன் அதிகாரத் தோணியில் அவர்களை எழுப்பி கலைத்ததுடன் கதிரைகளையும் தள்ளிவிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த பிரதேச சபை, மாநகர சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்ட நிலையில் அங்கு சற்று பதற்றமான நிலை ஏற்பட்டது.

மேலும் இக் கடை உரிய அனுமதிகளுடன் நடத்தப்படுகிறதா எனவும் சுகாதார தரப்பினரின் அனுமதியுடன் நடத்தப்படுகிறதா எனவும் அவர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.  

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் யாழ் நகர நுழைவாயில் - நாவற்குழி பகுதியில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மக்கள்பலரும் கலந்து கொண்டுள்ளனர். 


இளைப்பாற அமர்ந்த தாய்மார்களை விரட்டிய வியாபாரி தட்டிக்கேட்ட மக்கள் பிரதிநிதிகள் யாழ் செம்மணியில் சம்பவம்   யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி யாழில் இன்று போராட்டம்  இடம்பெற்றது.  இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் அங்கிருந்த பழக் கடைக்கு அருகில் இருந்த வேளை பழக்கடையை நடத்தும் இளைஞன் அதிகாரத் தோணியில் அவர்களை எழுப்பி கலைத்ததுடன் கதிரைகளையும் தள்ளிவிட்டுள்ளார்.இதையடுத்து அங்கிருந்த பிரதேச சபை, மாநகர சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்ட நிலையில் அங்கு சற்று பதற்றமான நிலை ஏற்பட்டது.மேலும் இக் கடை உரிய அனுமதிகளுடன் நடத்தப்படுகிறதா எனவும் சுகாதார தரப்பினரின் அனுமதியுடன் நடத்தப்படுகிறதா எனவும் அவர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் யாழ் நகர நுழைவாயில் - நாவற்குழி பகுதியில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மக்கள்பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement