எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வரும் 29ம் திகதி முதல் நிலவக்கூடிய அலை வடிவ காற்று மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு கடற்படை வீரர்கள் விமானங்கள் மற்றும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
வடக்கு வடமத்திய மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காட்டிலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதன்படி ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார் .
அலை வடிவ காற்று மழையுடனான வானிலை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வரும் 29ம் திகதி முதல் நிலவக்கூடிய அலை வடிவ காற்று மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனை கருத்திற்கொண்டு கடற்படை வீரர்கள் விமானங்கள் மற்றும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். வடக்கு வடமத்திய மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காட்டிலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இதன்படி ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார் .