• May 23 2026

பெருவில் பாரிய நிலநடுக்கம் பதிவு; வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

Chithra / Dec 28th 2025, 12:19 pm
image

 

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 


ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 


இதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.


நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பெருவில் பாரிய நிலநடுக்கம் பதிவு; வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்  பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement