• Apr 18 2026

சட்டவிரோத மது ஆலையை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரை தாக்கிய குளவிகள் - 3 பேர் நிலை கவலை!

Aathira / Apr 1st 2026, 4:08 pm
image

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் இன்று (1) குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் காட்டு வழி ஒன்றின் வழியாக சென்ற அதிகாரிகள், அந்த காட்டுப் பகுதியில் திடீரென குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 

பின்பு உடனடியாக 1990 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான 2 பேர் கொத்மலை வைத்தியசாலையிலும், மேலும் 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நுவரெலியா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மது ஆலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இவ்வாறு எதிர்பாராத விதமாக குளவி தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் நிலை பலரது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத மது ஆலையை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரை தாக்கிய குளவிகள் - 3 பேர் நிலை கவலை கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் இன்று (1) குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ரகசிய தகவலின் அடிப்படையில் காட்டு வழி ஒன்றின் வழியாக சென்ற அதிகாரிகள், அந்த காட்டுப் பகுதியில் திடீரென குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பின்பு உடனடியாக 1990 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.குளவி கொட்டுக்கு இலக்கான 2 பேர் கொத்மலை வைத்தியசாலையிலும், மேலும் 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நுவரெலியா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.சட்டவிரோத மது ஆலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இவ்வாறு எதிர்பாராத விதமாக குளவி தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் நிலை பலரது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement