• Jul 21 2026

ஈரானில் கெத்து காட்டும் அமெரிக்கா-பற்றி எறியும் ஏவுகணை அமைப்பு

Ziya / Jul 20th 2026, 9:41 am
image


ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட இரவு நேர வான்வழித் தாக்குதல்களில், அமெரிக்கப் படைகள் ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) தொடர்பான 110 இலக்குகளைத் தாக்கியுள்ளன.


இந்த தாக்குதல்களில் குறைந்தது 20 ஏவுகணை ஏவுதளங்கள், தலைமையகங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் இலக்காகவுள்ளன.


மேலும், சீனாவால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குறைந்தது இரண்டு வான் பாதுகாப்பு அமைப்புகளும் அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த தாக்குதல்கள் ஈரானின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலின் முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.


எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்களை ஈரான் தரப்பு முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளதா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அமெரிக்கா–ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த தாக்குதல் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் கெத்து காட்டும் அமெரிக்கா-பற்றி எறியும் ஏவுகணை அமைப்பு ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட இரவு நேர வான்வழித் தாக்குதல்களில், அமெரிக்கப் படைகள் ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) தொடர்பான 110 இலக்குகளைத் தாக்கியுள்ளன.இந்த தாக்குதல்களில் குறைந்தது 20 ஏவுகணை ஏவுதளங்கள், தலைமையகங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் இலக்காகவுள்ளன.மேலும், சீனாவால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குறைந்தது இரண்டு வான் பாதுகாப்பு அமைப்புகளும் அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தாக்குதல்கள் ஈரானின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலின் முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்களை ஈரான் தரப்பு முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளதா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அமெரிக்கா–ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த தாக்குதல் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement