இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகமாக பயணம் செய்தமை மற்றும் அதிக கொண்டாட்டங்களில் ஈடுபட்டமையே இதற்கு காரணமாகும்.
இந்த வைரஸ் நோய்களில், இன்ப்ளூயன்ஸாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலை மற்றும் நுளம்புகளின் அதிகரிப்பு காரணமாக பல தொற்று நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிக்குன்குனியாவின் அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, உடல் வலிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மூக்கில் ஏற்படும் கறுப்பு நிற அடையாளம், கைகள் மற்றும் கால்களில் கருப்பு புள்ளிகள் ஆகியவை அடங்கும்.
மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே, அத்தகைய சிறுவர்களை, மாணவர்கள் கூடும் பிற இடங்களுக்கும் அனுப்புவதற்கு முன்பு, அவர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே அதிகரித்துள்ள மூன்று நோய்கள்; இலங்கை பெற்றோர்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகமாக பயணம் செய்தமை மற்றும் அதிக கொண்டாட்டங்களில் ஈடுபட்டமையே இதற்கு காரணமாகும்.இந்த வைரஸ் நோய்களில், இன்ப்ளூயன்ஸாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மழையுடனான காலநிலை மற்றும் நுளம்புகளின் அதிகரிப்பு காரணமாக பல தொற்று நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சிக்குன்குனியாவின் அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, உடல் வலிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மூக்கில் ஏற்படும் கறுப்பு நிற அடையாளம், கைகள் மற்றும் கால்களில் கருப்பு புள்ளிகள் ஆகியவை அடங்கும்.மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, அத்தகைய சிறுவர்களை, மாணவர்கள் கூடும் பிற இடங்களுக்கும் அனுப்புவதற்கு முன்பு, அவர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.