யாழ்ப்பாண குடிநீர் தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஒன்றான பாலி ஆற்றுத் திட்டத்தினை எமது அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
பாலி ஆற்றுத் திட்டத்துக்காக கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதா? என வினவியை போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் பொருட்டு மன்னார் முல்லைத்தீவு குறுக்காக பாயும் பாலி ஆற்றினை மறித்து யாழ்ப்பாண குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் முகமாக கடந்த அரசாங்கத்தினால் இந்தத் திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டது.
குறித்த திட்டத்தினை எமது அரசாங்கம் நிறுத்துவதற்கான எந்த ஒரு முடிவயும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எடுக்கவில்லை.
கடந்த அரசாங்கங்களில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் பல அரசியல் நோக்கங்கள் கருதி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களாக பார்க்கப்படுகின்ற நிலையில் பாலி ஆற்றுத் திட்டம் மக்களுக்கு நன்மை பயக்குமானால் அதனை நமது அரசாங்கம் முன்னோக்கி கொண்டு செல்லும்.
குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்கு வன வளத் திணக்களம் இடையூறாக அமையாது ஏனெனில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களாகவே அமையும் .
ஆகவே தற்போது உள்ள சூழலில் பாலி ஆற்றுத் திட்டத்தினை எமது அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பாலி ஆற்றுத் திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை- கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு. யாழ்ப்பாண குடிநீர் தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஒன்றான பாலி ஆற்றுத் திட்டத்தினை எமது அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பாலி ஆற்றுத் திட்டத்துக்காக கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதா என வினவியை போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாண குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் பொருட்டு மன்னார் முல்லைத்தீவு குறுக்காக பாயும் பாலி ஆற்றினை மறித்து யாழ்ப்பாண குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் முகமாக கடந்த அரசாங்கத்தினால் இந்தத் திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டது. குறித்த திட்டத்தினை எமது அரசாங்கம் நிறுத்துவதற்கான எந்த ஒரு முடிவயும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எடுக்கவில்லை. கடந்த அரசாங்கங்களில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் பல அரசியல் நோக்கங்கள் கருதி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களாக பார்க்கப்படுகின்ற நிலையில் பாலி ஆற்றுத் திட்டம் மக்களுக்கு நன்மை பயக்குமானால் அதனை நமது அரசாங்கம் முன்னோக்கி கொண்டு செல்லும். குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்கு வன வளத் திணக்களம் இடையூறாக அமையாது ஏனெனில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களாகவே அமையும் .ஆகவே தற்போது உள்ள சூழலில் பாலி ஆற்றுத் திட்டத்தினை எமது அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.