• Jun 10 2025

மாநகர சபையின் அலட்சிய போக்கால் நோய் பரவும் அபாயத்தில் காணப்படும் யாழ் நகர மத்திய பகுதி....!

Thansita / Jun 9th 2025, 10:17 pm
image

யாழ் நகர மத்திய பகுதியில் அதாவது அரச பேரூந்து தரிப்பிடத்தின் முன் பகுதியில்  நோய்கள் அதிகளவு பரவும் அபாயத்தில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது 

இப் பகுதியில் வடிகால் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதால் குறித்த பகுதியில் சுமார் 20 m வடிகால் அமைப்பு திறந்த நிலையில் காணப்படுவதோடு இப் பகுதியில் வீதியானது மூடப்பட்டே காணப்படுகின்றது

இப் பகுதி போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதோடு , திறந்த நிலையில் காணப்படும் வடிகால் அமைப்பில் அதிகளவு நீர் தேங்கி நிற்பதை காணக்கூடியவாறு உள்ளது 

மற்றும் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், மிருக எச்சங்கள் மற்றும் பல கழிவு பொருட்கள் காணப்படுவதோடு  துர்நாற்றம் வீசுகின்றது

மேலும் இவ் வடிவமைப்பில் அதிகளவான ஈக்கள் மற்றும் நுளம்புகள் பெருகும் அபாயகரமாக உள்ளது.

பிரதானமாக குறித்த பகுதிக்கு அண்மித்த பகுதியிலே பழக்கடை வியாபார நிலையங்கள் அதிகளவு காணப்படுவதோடு இவ் சம்பவத்தால் அவ் வியாபார நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர் 

மற்றும் குறித்த இடத்தில் பெருகும் ஈக்கள் அண்மித்த பகுதியில் இருக்கும் பழக்கடை மற்றும் திறந்த உணவகங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் என்பவற்றில் நிற்பதால் பாரியளவு நோய் பரவும் அபாயம் உள்ளது எனவும்

இதற்கான மாற்று நடவடிக்கைகளை மாநகர சபை உடனடியாக செய்ய வேண்டும் என இப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கேட்டு நிற்கின்றனர்.



மாநகர சபையின் அலட்சிய போக்கால் நோய் பரவும் அபாயத்தில் காணப்படும் யாழ் நகர மத்திய பகுதி. யாழ் நகர மத்திய பகுதியில் அதாவது அரச பேரூந்து தரிப்பிடத்தின் முன் பகுதியில்  நோய்கள் அதிகளவு பரவும் அபாயத்தில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது இப் பகுதியில் வடிகால் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதால் குறித்த பகுதியில் சுமார் 20 m வடிகால் அமைப்பு திறந்த நிலையில் காணப்படுவதோடு இப் பகுதியில் வீதியானது மூடப்பட்டே காணப்படுகின்றது இப் பகுதி போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதோடு , திறந்த நிலையில் காணப்படும் வடிகால் அமைப்பில் அதிகளவு நீர் தேங்கி நிற்பதை காணக்கூடியவாறு உள்ளது மற்றும் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், மிருக எச்சங்கள் மற்றும் பல கழிவு பொருட்கள் காணப்படுவதோடு  துர்நாற்றம் வீசுகின்றது மேலும் இவ் வடிவமைப்பில் அதிகளவான ஈக்கள் மற்றும் நுளம்புகள் பெருகும் அபாயகரமாக உள்ளது.பிரதானமாக குறித்த பகுதிக்கு அண்மித்த பகுதியிலே பழக்கடை வியாபார நிலையங்கள் அதிகளவு காணப்படுவதோடு இவ் சம்பவத்தால் அவ் வியாபார நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர் மற்றும் குறித்த இடத்தில் பெருகும் ஈக்கள் அண்மித்த பகுதியில் இருக்கும் பழக்கடை மற்றும் திறந்த உணவகங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் என்பவற்றில் நிற்பதால் பாரியளவு நோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் இதற்கான மாற்று நடவடிக்கைகளை மாநகர சபை உடனடியாக செய்ய வேண்டும் என இப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கேட்டு நிற்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement