அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களை ஈரான் தாக்க முயன்றால், அமெரிக்கா அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளார்.
“ஹோர்முஸ் ஜலசந்தியில் தாங்கள் நியாயமானவர்கள் என்பதை நிரூபிக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானுக்கு எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கப் போகிறார்கள் என்றால், நாங்கள் அவர்களைத் தாக்குவோம்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் தரப்பினர் தங்களை விட “பத்து மடங்கு கடுமையாக” பதிலளிப்பதாகக் கூறியுள்ள நிலையில், ஒவ்வொரு இரவும் அமெரிக்கப் படைகள் அவர்களை “இழிவுபடுத்தி வருவதாக” டிரம்ப் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றாக உள்ள நிலையில், அங்கு வர்த்தகக் கப்பல்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் பிராந்திய பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம் உச்சம் -ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களை ஈரான் தாக்க முயன்றால், அமெரிக்கா அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளார்.“ஹோர்முஸ் ஜலசந்தியில் தாங்கள் நியாயமானவர்கள் என்பதை நிரூபிக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானுக்கு எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கப் போகிறார்கள் என்றால், நாங்கள் அவர்களைத் தாக்குவோம்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.மேலும், ஈரான் தரப்பினர் தங்களை விட “பத்து மடங்கு கடுமையாக” பதிலளிப்பதாகக் கூறியுள்ள நிலையில், ஒவ்வொரு இரவும் அமெரிக்கப் படைகள் அவர்களை “இழிவுபடுத்தி வருவதாக” டிரம்ப் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார்.ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றாக உள்ள நிலையில், அங்கு வர்த்தகக் கப்பல்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் பிராந்திய பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என அச்சம் நிலவுகிறது.ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.