• Apr 15 2026

இலங்கை - நியூசிலாந்து மோதல்: கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Chithra / Feb 25th 2026, 10:22 am
image

 இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிலையில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.


இந்தப் போட்டி இரவு 7.00 மணிக்கு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மைதானத்திலும் அதைச் சுற்றியும் விசேட போக்குவரத்து ஏற்பாடு செயல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.


அதன்படி, வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், போட்டியின் போது வழங்கப்படும் போக்குவரத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை - நியூசிலாந்து மோதல்: கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்  இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிலையில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இந்தப் போட்டி இரவு 7.00 மணிக்கு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மைதானத்திலும் அதைச் சுற்றியும் விசேட போக்குவரத்து ஏற்பாடு செயல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.அதன்படி, வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், போட்டியின் போது வழங்கப்படும் போக்குவரத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement