• Feb 18 2026

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு - மேலும் ஒருவர் கைது!

Chithra / Feb 3rd 2025, 7:20 am
image


கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் விசேட அதிரடிப் படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு - மேலும் ஒருவர் கைது கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் விசேட அதிரடிப் படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement