• May 15 2026

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள்! – அமைச்சர் உறுதி

Chithra / May 15th 2026, 2:16 pm
image

இந்த வருடத்திற்குள் (2026) மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.


கண்டியில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.


எனினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த துல்லியமான திகதியை இப்போது உறுதியாகக் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் திட்டமிட்டு எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை.


இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் தெளிவான நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசாங்கம் உள்ளது.


எனவே, மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து பொதுமக்கள் எவரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும் அமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் – அமைச்சர் உறுதி இந்த வருடத்திற்குள் (2026) மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.எனினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த துல்லியமான திகதியை இப்போது உறுதியாகக் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் திட்டமிட்டு எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை.இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் தெளிவான நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசாங்கம் உள்ளது.எனவே, மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து பொதுமக்கள் எவரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும் அமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement