• Jun 05 2025

நியாயமான விலையில் நுகர்வோருக்கு சீனியை வழங்குவதே எமது நோக்கம்-அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Sharmi / Jun 3rd 2025, 3:20 pm
image

செவனக்கல சீனித் தொழிற்சாலையில் 36000 தொன் சீனி விற்கப்படாத நிலையில் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

சீனியை விற்க முடியாமல் இருப்பதற்காக  நாங்கள் வர்த்தகத்தை மேற்கொள்கின்ற போது நிறுவனத்தின் நிறைவேற்று உத்தியோகத்தர், தரம் மாற்றும் உத்தியோகத்தர் ஒரு பொய்யைச் சொன்னால் எவ்வாறு இருக்கும். அப்போது சந்தை மூடப்படும். சரி அவ்வாறென்றால் குறைந்த விலையில்  பெற்றுக்கொள்ள முடியும் என்று சந்தை நினைக்கும். அது அப்பட்டமான பொய். 

36000 தொன்  விற்க முடியாத நிலையில் காணப்பட்ட போது தான்  நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். அப்போது யாருமே வெளியே சென்று சொல்லவில்லை விற்க முடியவில்லை என்று. 17000 மெட்ரிக் தொன் என்பது விற்க முடியாத ஒரு அளவு அல்ல.

இது சீனி உற்பத்தி செய்யப்படுகின்ற காலம். இது வெளியில் அனுப்பப்பட வேண்டியிருந்த சீனியின் அளவு. அதுவும் செவனக்கலவில் இருந்தது 1000 மெட்ரிக் தொன். மீதி இருந்தது பல்வத்தையில். 

ஆகவே  தான் இந்த உத்தியோகத்தரை நாங்கள் நீக்கினோம். புதிதாக உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்தோம்.

ஆகவே இது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினை. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் தான் இதை விஸ்வரூபம் ஆக்கியவர். சுகத் என்ற ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு உதவியவர் றொஹான்.அவரைப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு இரு நாள்களுக்குப் பிறகு ஆர்ப்பாட்டங்களைச் செய்தார். 

அதனால் செவனக்கலை நிலையம் மூடப்படவுமில்லை. செவனக்கலை நிலையம் மூடவும் படாது.செவனக்கலையில் சிறிய ஒரு இயந்திரம் இயங்கப்படவில்லை. ஆனால் நாங்கள் அதனை சரி செய்தோம்.செவனக்கலை சென்று பாருங்க. அது மூடப்படவில்லை.இதை எதிர்க்க இவர்கள் எத்தனிக்கிறார்கள். இதை விற்பது என்றால் இவர்களுக்குப் பிரச்சினையில்லை.அரசாங்கம் இவற்றைக் கொண்டு செல்லுகின்ற போது இவர்களுக்கு அது பிரச்சினை. 

நாளை இதை விற்போம் என்று சொன்னால் வாங்க இவர்கள் வரிசையில் இருப்பார்கள். நாங்கள் அதை விற்பதில்லை. தெளிவாகக் கூறுகிறோம்.270000 மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை. ஆகவே இப்போது நாங்கள் உண்மையில் நஷ்டத்தில் இயங்குகிறோம். அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதில் இலபாம் ஈட்டும்  நிலைக்கு நாங்கள் உயர்த்துவோம். நாஙகள் கரும்பை சீனியாக  ஏற்றுமதி செய்வோம். 

நாங்கள் இந்த செவனக்கலையை அபிவிருத்தி செய்வோம். எங்களுடைய எதிர்பார்ப்பு விவசாயிகளுக்குக் கிடைக்கின்ற பணத்தை ஒரு சதவீதம் கூட குறைக்காமல் ஊழியருடைய பிரச்சினையை தீர்த்து நியாயமான விலையில் நுகர்வோருக்கு சீனியை வழங்குவதே ஆகும்.- என்றார்.

நியாயமான விலையில் நுகர்வோருக்கு சீனியை வழங்குவதே எமது நோக்கம்-அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி செவனக்கல சீனித் தொழிற்சாலையில் 36000 தொன் சீனி விற்கப்படாத நிலையில் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சீனியை விற்க முடியாமல் இருப்பதற்காக  நாங்கள் வர்த்தகத்தை மேற்கொள்கின்ற போது நிறுவனத்தின் நிறைவேற்று உத்தியோகத்தர், தரம் மாற்றும் உத்தியோகத்தர் ஒரு பொய்யைச் சொன்னால் எவ்வாறு இருக்கும். அப்போது சந்தை மூடப்படும். சரி அவ்வாறென்றால் குறைந்த விலையில்  பெற்றுக்கொள்ள முடியும் என்று சந்தை நினைக்கும். அது அப்பட்டமான பொய். 36000 தொன்  விற்க முடியாத நிலையில் காணப்பட்ட போது தான்  நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். அப்போது யாருமே வெளியே சென்று சொல்லவில்லை விற்க முடியவில்லை என்று. 17000 மெட்ரிக் தொன் என்பது விற்க முடியாத ஒரு அளவு அல்ல. இது சீனி உற்பத்தி செய்யப்படுகின்ற காலம். இது வெளியில் அனுப்பப்பட வேண்டியிருந்த சீனியின் அளவு. அதுவும் செவனக்கலவில் இருந்தது 1000 மெட்ரிக் தொன். மீதி இருந்தது பல்வத்தையில். ஆகவே  தான் இந்த உத்தியோகத்தரை நாங்கள் நீக்கினோம். புதிதாக உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்தோம். ஆகவே இது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினை. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் தான் இதை விஸ்வரூபம் ஆக்கியவர். சுகத் என்ற ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு உதவியவர் றொஹான்.அவரைப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு இரு நாள்களுக்குப் பிறகு ஆர்ப்பாட்டங்களைச் செய்தார். அதனால் செவனக்கலை நிலையம் மூடப்படவுமில்லை. செவனக்கலை நிலையம் மூடவும் படாது.செவனக்கலையில் சிறிய ஒரு இயந்திரம் இயங்கப்படவில்லை. ஆனால் நாங்கள் அதனை சரி செய்தோம்.செவனக்கலை சென்று பாருங்க. அது மூடப்படவில்லை.இதை எதிர்க்க இவர்கள் எத்தனிக்கிறார்கள். இதை விற்பது என்றால் இவர்களுக்குப் பிரச்சினையில்லை.அரசாங்கம் இவற்றைக் கொண்டு செல்லுகின்ற போது இவர்களுக்கு அது பிரச்சினை. நாளை இதை விற்போம் என்று சொன்னால் வாங்க இவர்கள் வரிசையில் இருப்பார்கள். நாங்கள் அதை விற்பதில்லை. தெளிவாகக் கூறுகிறோம்.270000 மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை. ஆகவே இப்போது நாங்கள் உண்மையில் நஷ்டத்தில் இயங்குகிறோம். அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதில் இலபாம் ஈட்டும்  நிலைக்கு நாங்கள் உயர்த்துவோம். நாஙகள் கரும்பை சீனியாக  ஏற்றுமதி செய்வோம். நாங்கள் இந்த செவனக்கலையை அபிவிருத்தி செய்வோம். எங்களுடைய எதிர்பார்ப்பு விவசாயிகளுக்குக் கிடைக்கின்ற பணத்தை ஒரு சதவீதம் கூட குறைக்காமல் ஊழியருடைய பிரச்சினையை தீர்த்து நியாயமான விலையில் நுகர்வோருக்கு சீனியை வழங்குவதே ஆகும்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement