• Jun 11 2025

தரமற்ற முருக்கு கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சுற்றிவளைத்த அதிகாரிகள்!

Thansita / Jun 10th 2025, 6:03 pm
image

கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும்  தரமற்ற முருக்கு கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

அந்தவகையில் இந்த முருக்கு கம்பிகள் இரவு நேரத்தில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளால்  கண்டறிந்துள்ளனர். 

அதன்படி,  விசாரணை அதிகாரிகள், குறித்த உற்பத்தி நிறுவனத்திலிருந்து இரவு நேரத்தில் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பின்தொடர்ந்து களஞ்சியசாலையை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர். 

இவ் நடவடிக்கையின் போது  400 தொன் என மதிப்பிடப்பட்ட முருக்கு கம்பிகள் களஞ்சியசாலையில் இருப்பது கண்டறியப்பட்டது

 இந்தப் பொருட்களின் சந்தை மதிப்பு 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதன்படி, இந்த முற்றுகை தொடர்பாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை மூலம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது

அடுத்தக்கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் வழக்கு தொடரப்படவுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.

தரமற்ற முருக்கு கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை சுற்றிவளைத்த அதிகாரிகள் கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும்  தரமற்ற முருக்கு கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் இந்த முருக்கு கம்பிகள் இரவு நேரத்தில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளால்  கண்டறிந்துள்ளனர். அதன்படி,  விசாரணை அதிகாரிகள், குறித்த உற்பத்தி நிறுவனத்திலிருந்து இரவு நேரத்தில் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பின்தொடர்ந்து களஞ்சியசாலையை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர். இவ் நடவடிக்கையின் போது  400 தொன் என மதிப்பிடப்பட்ட முருக்கு கம்பிகள் களஞ்சியசாலையில் இருப்பது கண்டறியப்பட்டது இந்தப் பொருட்களின் சந்தை மதிப்பு 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, இந்த முற்றுகை தொடர்பாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை மூலம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுஅடுத்தக்கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் வழக்கு தொடரப்படவுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement