மருத்துவ ரீதியாக உயிரிழந்த பெண் - 8 நிமிடத்தில் மீண்டும் உயிர் பெற்றார் ...! - ஐக்கிய அமெரிக்காவில் அதிசயம்..
ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவ ரீதியாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி என்ற பெண், மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உயிர்பெற்று தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரியானா உயிர்பெற்ற வேளை நிகழ்ந்த நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்துள்ளார். அதில் , தனது உடல் "கைவிட்ட" நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அப்போது, "தயாராக இருக்கிறீர்களா?" என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் பிரியான தெரிவித்தார். அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து, காலமற்ற ஒரு பரிமாணத்தில் மிதந்ததாக உணர்ந்தார். "நான் திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன். என் மனித உருவை நினைவில் கொள்ளவில்லை. முற்றிலும் அசையாமல் இருந்தேன். ஆனால் முழுமையாக உயிருடன், விழிப்புடன், முன்பை விட அதிகமாக உணர்ந்தேன். வலி இல்லை, ஆழமான அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது."
"மரணம் ஒரு மாயை, ஏனெனில் நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது நினைவு உயிருடன் இருக்கிறது. அந்த நிலையில், நமது எண்ணங்கள் யதார்த்தத்தை வடிவமைக்கின்றன." இந்த அனுபவம், மனித வாழ்க்கையின் தற்காலிக மற்றும் புனிதமற்ற தன்மையை உணர வைத்தது.
இந்த அனுபவம் "என்னை பயமுறுத்தியவை, இனி என்னை ஆட்டிப்படைக்கவில்லை, நான் துரத்தியவை இனி முக்கியமாகத் தோன்றவில்லை,"- என அவரது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் அனைவரையும் ஒரு ஆச்சரியத்தில் நெகிழ வைத்துள்ளது.
உடலில் இருந்து பிரிந்து உயிருடன் இருப்பதை உணர்ந்தேன் - நினைவைப் பகிர்ந்தார் பிரியானா. உலகையே அதிசயித்த சம்பவம் மருத்துவ ரீதியாக உயிரிழந்த பெண் - 8 நிமிடத்தில் மீண்டும் உயிர் பெற்றார் . - ஐக்கிய அமெரிக்காவில் அதிசயம்.ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவ ரீதியாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி என்ற பெண், மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உயிர்பெற்று தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரியானா உயிர்பெற்ற வேளை நிகழ்ந்த நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்துள்ளார். அதில் , தனது உடல் "கைவிட்ட" நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அப்போது, "தயாராக இருக்கிறீர்களா" என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் பிரியான தெரிவித்தார். அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து, காலமற்ற ஒரு பரிமாணத்தில் மிதந்ததாக உணர்ந்தார். "நான் திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன். என் மனித உருவை நினைவில் கொள்ளவில்லை. முற்றிலும் அசையாமல் இருந்தேன். ஆனால் முழுமையாக உயிருடன், விழிப்புடன், முன்பை விட அதிகமாக உணர்ந்தேன். வலி இல்லை, ஆழமான அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது." "மரணம் ஒரு மாயை, ஏனெனில் நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது நினைவு உயிருடன் இருக்கிறது. அந்த நிலையில், நமது எண்ணங்கள் யதார்த்தத்தை வடிவமைக்கின்றன." இந்த அனுபவம், மனித வாழ்க்கையின் தற்காலிக மற்றும் புனிதமற்ற தன்மையை உணர வைத்தது. இந்த அனுபவம் "என்னை பயமுறுத்தியவை, இனி என்னை ஆட்டிப்படைக்கவில்லை, நான் துரத்தியவை இனி முக்கியமாகத் தோன்றவில்லை,"- என அவரது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் அனைவரையும் ஒரு ஆச்சரியத்தில் நெகிழ வைத்துள்ளது.