• Sep 01 2025

மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பொன்சேகா ஆதங்கம்

Aathira / Sep 1st 2025, 7:43 pm
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என சரத் பொன்சேகா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

2010 இல் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான ஊழல் மற்றும் அரசியல் முறைகேடுகளையும் வன்மையாக கண்டித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,  

மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கைத் தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு பார்வை இல்லை.

சர்வதேச தலைவர்களை ஒப்பிடுகையில், அவர்கள் ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள்.

2010 ஆம் ஆண்டு ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கு அரசு மேற்கொண்ட பயணத்தையும், அப்போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகாரப்பூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதையும் அந்த நேரத்தில் அதிகளவான ஊழல்கள் நடைபெற்றதாகவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை தாம் மன்னிக்கவில்லை என்றாலும், அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய அரசின் செயற்பாட்டை ஆதரிப்பதாக குறிப்பிட்டார். 

ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை. அவரது தலைவிதியைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. 

அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் இந்த விஷயத்தில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், ராஜபக்சே போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றார்.

மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பொன்சேகா ஆதங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என சரத் பொன்சேகா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.2010 இல் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான ஊழல் மற்றும் அரசியல் முறைகேடுகளையும் வன்மையாக கண்டித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,  மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கைத் தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு பார்வை இல்லை.சர்வதேச தலைவர்களை ஒப்பிடுகையில், அவர்கள் ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள்.2010 ஆம் ஆண்டு ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கு அரசு மேற்கொண்ட பயணத்தையும், அப்போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகாரப்பூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதையும் அந்த நேரத்தில் அதிகளவான ஊழல்கள் நடைபெற்றதாகவும் சுட்டிக் காட்டினார்.மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை தாம் மன்னிக்கவில்லை என்றாலும், அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய அரசின் செயற்பாட்டை ஆதரிப்பதாக குறிப்பிட்டார். ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை. அவரது தலைவிதியைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் இந்த விஷயத்தில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், ராஜபக்சே போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement