• Jun 07 2025

உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு எதிரான வழக்கு; 270,000 தண்டப்பணம்! பருத்தித்துறை நீதிமன்றம் அதிரடி

Chithra / Jun 6th 2025, 7:59 pm
image


பருத்தித்துறை நீதமன்ற எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பல கடைகளுக்கு எதிராக  பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளிற்கு அமைய இன்றையதினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 270,000 தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  

அதன்படி பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நான்கு உணவகங்களிற்கு எதிராக  பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் விசாரணையின் பின்  பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால்  110000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, கழிவு நீரினை வெளிச்சூழலிற்கு வெளியேற்றியமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, 

உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இதேவேளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்குட்பட்ட புலோலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவில், காலாவதி கடந்த பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய இரு  உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக புலோலி பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் விசாரணையின் பின்  பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் தலா 50000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

அத்தோடு வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள  குளிர்களி விற்பனை நிலையம், இனிப்பு கடை, காரம் சுண்டல் விற்பனை நிலையம் உட்பட 6 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக வல்வெட்டித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய விசாரணையின் பின் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 60000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, அழுக்கான நகங்களுடன் உணவினை பரிமாறியமை, அழுக்கான கரண்டிகளை பயன்படுத்தி குளிர்களியை நுகர்வோரிற்கு விநியோகம் செய்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளிற்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  

உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு எதிரான வழக்கு; 270,000 தண்டப்பணம் பருத்தித்துறை நீதிமன்றம் அதிரடி பருத்தித்துறை நீதமன்ற எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பல கடைகளுக்கு எதிராக  பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளிற்கு அமைய இன்றையதினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 270,000 தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  அதன்படி பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நான்கு உணவகங்களிற்கு எதிராக  பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் விசாரணையின் பின்  பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால்  110000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, கழிவு நீரினை வெளிச்சூழலிற்கு வெளியேற்றியமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்குட்பட்ட புலோலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவில், காலாவதி கடந்த பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய இரு  உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக புலோலி பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் விசாரணையின் பின்  பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் தலா 50000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.அத்தோடு வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள  குளிர்களி விற்பனை நிலையம், இனிப்பு கடை, காரம் சுண்டல் விற்பனை நிலையம் உட்பட 6 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக வல்வெட்டித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய விசாரணையின் பின் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 60000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, அழுக்கான நகங்களுடன் உணவினை பரிமாறியமை, அழுக்கான கரண்டிகளை பயன்படுத்தி குளிர்களியை நுகர்வோரிற்கு விநியோகம் செய்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளிற்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  

Advertisement

Advertisement

Advertisement