• Jun 27 2025

கீரி சம்பா அரிசி பற்றாக்குறை – மாற்று அரிசி இறக்குமதிக்கு முடிவு!

Thansita / Jun 26th 2025, 6:16 pm
image

இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அறிவுறுத்தலின் அடிப்படையில், உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி போதுமானளவில் இல்லை என்பதால், 40,000 மெட்ரிக் தொன் மாற்று வகை அரிசி இறக்குமதி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில், 5,000 மெட்ரிக் தொன் அரிசி அரசு நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட உள்ளதுடன், மீதமுள்ள தொகை தனியார் துறையின் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி செயலகத்தில் கூடிய முக்கிய குழுவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரி சம்பா அரிசி பற்றாக்குறை – மாற்று அரிசி இறக்குமதிக்கு முடிவு இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அறிவுறுத்தலின் அடிப்படையில், உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி போதுமானளவில் இல்லை என்பதால், 40,000 மெட்ரிக் தொன் மாற்று வகை அரிசி இறக்குமதி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதில், 5,000 மெட்ரிக் தொன் அரிசி அரசு நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட உள்ளதுடன், மீதமுள்ள தொகை தனியார் துறையின் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி செயலகத்தில் கூடிய முக்கிய குழுவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement