• Jun 20 2025

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த கந்தளாய் நீர்த்தேக்கம்; விடுக்கப்பட்ட கோரிக்கை..!

Sharmi / Jun 20th 2025, 8:46 am
image

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் இரண்டாவது பெரிய குளமாக கந்தளாய் குளம்  விளங்குகின்றது. 

இந் நீர்த்தேக்கம் தற்போது பிரபல சுற்றுலா தலமாக மாறி, அதிக எண்ணிக்கையில் பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

எனினும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தாலும், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலைமை அவர்களுக்கு  சூழலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கந்தளாய் குள  சூழலில்  காணப்படும் மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுவதுடன் இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது.

அத்துடன் குறித்த பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன நிலையில் இது சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கின்றன.

அத்துடன், கழிப்பறை வசதி பாணப்படாமையினால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறு பல குறைபாடுகள் இருந்தும், சுற்றுலா ஆர்வம் குறையவில்லை என்பது கந்தளாய் குளத்தின் தன்மையை காட்டுகிறது. 

எனவே குறித்த பிரச்சினைகளை உரிய தரப்பினர் உடனடியாக நிவர்த்தி செய்து சுற்றுலா பயணிகளுக்கு சிறந்ததொரு சூழலை ஏற்படுத்தும் விதமாக அனைத்து கட்டுமானங்களையும் முன்னெடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப்பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.

இது தொடர்பில் பிரதேச நிர்வாகம், சுற்றுலா அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பொது கட்டமைப்புகள் அமைச்சு, இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த கந்தளாய் நீர்த்தேக்கம்; விடுக்கப்பட்ட கோரிக்கை. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் இரண்டாவது பெரிய குளமாக கந்தளாய் குளம்  விளங்குகின்றது. இந் நீர்த்தேக்கம் தற்போது பிரபல சுற்றுலா தலமாக மாறி, அதிக எண்ணிக்கையில் பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.எனினும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தாலும், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலைமை அவர்களுக்கு  சூழலை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக கந்தளாய் குள  சூழலில்  காணப்படும் மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுவதுடன் இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது.அத்துடன் குறித்த பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன நிலையில் இது சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கின்றன.அத்துடன், கழிப்பறை வசதி பாணப்படாமையினால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.இவ்வாறு பல குறைபாடுகள் இருந்தும், சுற்றுலா ஆர்வம் குறையவில்லை என்பது கந்தளாய் குளத்தின் தன்மையை காட்டுகிறது. எனவே குறித்த பிரச்சினைகளை உரிய தரப்பினர் உடனடியாக நிவர்த்தி செய்து சுற்றுலா பயணிகளுக்கு சிறந்ததொரு சூழலை ஏற்படுத்தும் விதமாக அனைத்து கட்டுமானங்களையும் முன்னெடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப்பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.இது தொடர்பில் பிரதேச நிர்வாகம், சுற்றுலா அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பொது கட்டமைப்புகள் அமைச்சு, இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement