• Jun 04 2025

யாழ் மாநகர முதல்வர் தெரிவு: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பெருகும் ஆதரவு..!

Sharmi / Jun 2nd 2025, 12:22 pm
image

யாழ் மாநகர சபையின் ஆட்சியினை கைப்பற்றுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தம் இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறிப்பாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு 12 ஆசனங்களும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன.

அதேவேளை இலங்கை தமிழரசு கட்சிக்கு 13 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.

இந்நிலையில் யாழ் மாநகர மேயர் தெரிவுக்கான ஆதரவு தொடர்பில் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ் மாநகர சபையில் மொத்தமாக 16 ஆசனங்களுடன் மேயர் தெரிவில் முன்னிலை வகிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை தமிழரசு கட்சியினை பொறுத்தவரையில்  மேயர் தெரிவின் போது ஈ.பி.டி.பியினர் ஆதரவளிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இறுதி நேரத்தில் யாழ் மாநகர மேயர் தெரிவில் எதுவும் நடக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ் மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட சபைகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









யாழ் மாநகர முதல்வர் தெரிவு: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பெருகும் ஆதரவு. யாழ் மாநகர சபையின் ஆட்சியினை கைப்பற்றுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து செயற்படுவதற்கான ஒப்பந்தம் இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு 12 ஆசனங்களும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன.அதேவேளை இலங்கை தமிழரசு கட்சிக்கு 13 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.இந்நிலையில் யாழ் மாநகர மேயர் தெரிவுக்கான ஆதரவு தொடர்பில் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ் மாநகர சபையில் மொத்தமாக 16 ஆசனங்களுடன் மேயர் தெரிவில் முன்னிலை வகிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.அதேவேளை தமிழரசு கட்சியினை பொறுத்தவரையில்  மேயர் தெரிவின் போது ஈ.பி.டி.பியினர் ஆதரவளிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இறுதி நேரத்தில் யாழ் மாநகர மேயர் தெரிவில் எதுவும் நடக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இது இவ்வாறு இருக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து செயற்படும் பட்சத்தில் யாழ் மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட சபைகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement