இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற பிரதான நிகழ்வு, இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான ‘India House’ இல் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுக்கு ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளும் வாசிக்கப்பட்டன.
இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக ‘சூரியபத் திரங்கா’ (Suryapath Tiranga) என்ற உலகளாவிய கொடியேற்றும் நிகழ்விலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் பங்கேற்றது.
உலகின் வெவ்வேறு நேர மண்டலங்களில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்கள் தொடர்ச்சியாக தேசியக் கொடியை ஏற்றும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இலங்கை கடற்படையின் இசைக்குழு மற்றும் சுவாமி விவேகானந்த கலாசார நிலைய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்த்தன.
இலங்கையில் அமைதிக்காக உயிரிழந்த இந்திய அமைதிப்படையினரை நினைவுகூரும் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் இந்திய உயர்ஸ்தானிகரும் அதிகாரிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.
இதனுடன், மதுபனி ஓவியப் பயிற்சி, வார்லி கலைப் பயிற்சி, இந்தியா–இலங்கை மைத்ரி சிறுவர் ஓவியப் போட்டி மற்றும் ‘India Through My Lens’ புகைப்படப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அதேவேளை, உலகளவில் நடத்தப்பட்ட ‘Bharat Ko Janiye’ வினாடி வினா போட்டியில் இலங்கையர்கள் அதிகளவில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாகத் தெரிவான இலங்கை வெற்றியாளர்கள் India House நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
இந்திய தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், ‘Har Ghar Tiranga’ பிரசாரத்தின் கீழ் இந்திய தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடும் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறப்பு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய துணைத் தூதரகங்கள் மற்றும் துணை உயர்ஸ்தானிகரகங்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து, ‘Swar Sangam – A Fusion Symphony’ என்ற சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இந்திய வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவும், இலங்கைப் பாடகி யொஹானியும் பங்கேற்றனர்.
மேலும், கொழும்பில் ஆகஸ்ட் 15 முதல் 16ஆம் திகதி வரை ‘India Fest 2026’ இரு நாள் விழா நடைபெற்றது. இதில் இந்திய ஆடைகள், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், கலைநிகழ்ச்சிகள், திரைப்படத் திரையிடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகள் மூலம் இந்தியா–இலங்கை இடையிலான மக்கள்-to-மக்கள் உறவு மற்றும் கலாசார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கொழும்பில் நடைபெற்ற பிரதான நிகழ்வு, இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான ‘India House’ இல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுக்கு ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளும் வாசிக்கப்பட்டன.இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக ‘சூரியபத் திரங்கா’ (Suryapath Tiranga) என்ற உலகளாவிய கொடியேற்றும் நிகழ்விலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் பங்கேற்றது. உலகின் வெவ்வேறு நேர மண்டலங்களில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்கள் தொடர்ச்சியாக தேசியக் கொடியை ஏற்றும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும், இலங்கை கடற்படையின் இசைக்குழு மற்றும் சுவாமி விவேகானந்த கலாசார நிலைய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்த்தன.இலங்கையில் அமைதிக்காக உயிரிழந்த இந்திய அமைதிப்படையினரை நினைவுகூரும் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் இந்திய உயர்ஸ்தானிகரும் அதிகாரிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.இதனுடன், மதுபனி ஓவியப் பயிற்சி, வார்லி கலைப் பயிற்சி, இந்தியா–இலங்கை மைத்ரி சிறுவர் ஓவியப் போட்டி மற்றும் ‘India Through My Lens’ புகைப்படப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.அதேவேளை, உலகளவில் நடத்தப்பட்ட ‘Bharat Ko Janiye’ வினாடி வினா போட்டியில் இலங்கையர்கள் அதிகளவில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பாகத் தெரிவான இலங்கை வெற்றியாளர்கள் India House நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.இந்திய தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.மேலும், ‘Har Ghar Tiranga’ பிரசாரத்தின் கீழ் இந்திய தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடும் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறப்பு கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய துணைத் தூதரகங்கள் மற்றும் துணை உயர்ஸ்தானிகரகங்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதனையடுத்து, ‘Swar Sangam – A Fusion Symphony’ என்ற சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இந்திய வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவும், இலங்கைப் பாடகி யொஹானியும் பங்கேற்றனர்.மேலும், கொழும்பில் ஆகஸ்ட் 15 முதல் 16ஆம் திகதி வரை ‘India Fest 2026’ இரு நாள் விழா நடைபெற்றது. இதில் இந்திய ஆடைகள், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், கலைநிகழ்ச்சிகள், திரைப்படத் திரையிடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்த நிகழ்வுகள் மூலம் இந்தியா–இலங்கை இடையிலான மக்கள்-to-மக்கள் உறவு மற்றும் கலாசார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.