• Jun 21 2025

வறுமையில் தான் இருக்கிறேன்- வசதியானவர் போல் காட்டப்பட்டேன்! சரிகமப சினேகா வருத்தம்!

shanuja / Jun 20th 2025, 8:54 pm
image


தமிழகத்தின் சீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள இலங்கைப் பெண் சினேகா, தனது வறுமையின் உச்சக்கட்டத்தை கண்ணீருடன் மேடையில் வெளிப்படுத்தியுள்ளார். 


தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சி சீனியர், யூனியர் என்ற ரீதியில் இடம்பெற்று வருகின்றது. 


தமிழகத்தின் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு ஷோ தான்  சரிகமப. 


தற்போது  சீனியர்களுக்கான 5ஆவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில்  இலங்கையில் இருந்து சினேகா என்ற பெண் பாட  சென்றுள்ளார். 


ஆனால் சினேகா வேறொரு பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது வசதியானவர் போல் காட்டப்பட்டார்.இதில் வசதி இல்லாத குடும்பமாக காட்டுகிறார் என நிறைய விமர்சனங்கள் எழுந்தன.


ஆனால்  சினேகா மிகவும்  வறுமைப்பட்ட குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளார். அவருக்கு மொத்தமாக 4 துணிகள் தான் உள்ளதாம். வறுமையால் இந்த நிகழ்ச்சிக்கு அப்பா-அம்மா இல்லாமல் தனியாக தான் வந்துள்ளாராம். அவர் உடை கூட இல்லை என்று சொன்னதும் பாடகி ஸ்வேதா நாம் கண்டிப்பாக ஷாப்பிங் செல்வோம் என கூறினார்.


அவரது அம்மா உடல்நலக் குறைவால் வீட்டிலேயே இருக்கிறார், அப்பாவின் சம்பளத்தில் தான் அவரது குடும்பம் உள்ளது. இலங்கையில் உள்ள அவரது ஊர் மக்கள் சினேகா குறித்தும், கஷ்டங்கள் குறித்தும் பேச தன்னுடைய நிலையை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.

வறுமையில் தான் இருக்கிறேன்- வசதியானவர் போல் காட்டப்பட்டேன் சரிகமப சினேகா வருத்தம் தமிழகத்தின் சீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள இலங்கைப் பெண் சினேகா, தனது வறுமையின் உச்சக்கட்டத்தை கண்ணீருடன் மேடையில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சி சீனியர், யூனியர் என்ற ரீதியில் இடம்பெற்று வருகின்றது. தமிழகத்தின் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு ஷோ தான்  சரிகமப. தற்போது  சீனியர்களுக்கான 5ஆவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில்  இலங்கையில் இருந்து சினேகா என்ற பெண் பாட  சென்றுள்ளார். ஆனால் சினேகா வேறொரு பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது வசதியானவர் போல் காட்டப்பட்டார்.இதில் வசதி இல்லாத குடும்பமாக காட்டுகிறார் என நிறைய விமர்சனங்கள் எழுந்தன.ஆனால்  சினேகா மிகவும்  வறுமைப்பட்ட குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளார். அவருக்கு மொத்தமாக 4 துணிகள் தான் உள்ளதாம். வறுமையால் இந்த நிகழ்ச்சிக்கு அப்பா-அம்மா இல்லாமல் தனியாக தான் வந்துள்ளாராம். அவர் உடை கூட இல்லை என்று சொன்னதும் பாடகி ஸ்வேதா நாம் கண்டிப்பாக ஷாப்பிங் செல்வோம் என கூறினார்.அவரது அம்மா உடல்நலக் குறைவால் வீட்டிலேயே இருக்கிறார், அப்பாவின் சம்பளத்தில் தான் அவரது குடும்பம் உள்ளது. இலங்கையில் உள்ள அவரது ஊர் மக்கள் சினேகா குறித்தும், கஷ்டங்கள் குறித்தும் பேச தன்னுடைய நிலையை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement