• Jun 21 2025

கட்டுப்பாட்டை இழந்த கார் - சுவர் மீது பாய்ந்து விபத்து; நால்வர் காயம்!

shanuja / Jun 20th 2025, 8:46 pm
image


வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சுவர் மீது மோதயதில் நால்வர் காயமடைந்துள்ளனர். 


இந்த விபத்துச் சம்பவம் குருணாகல் ஹெட்டிபொல, நுகவெல சந்தியில் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் நான்கு பேர் காயமடைந்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.


மோட்டார் காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளை  கட்டுப்பாட்டை இழந்து  அருகிலுள்ள சுவர் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று  பொலிஸார தெரிவித்துள்ளனர். 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



கட்டுப்பாட்டை இழந்த கார் - சுவர் மீது பாய்ந்து விபத்து; நால்வர் காயம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சுவர் மீது மோதயதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் குருணாகல் ஹெட்டிபொல, நுகவெல சந்தியில் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் நான்கு பேர் காயமடைந்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளை  கட்டுப்பாட்டை இழந்து  அருகிலுள்ள சுவர் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று  பொலிஸார தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement