• Mar 10 2026

சாய்ந்தமருதுவில் பசுமையான கடற்கரை பூங்கா திறப்பு!

Ziya / Feb 14th 2026, 1:40 pm
image

அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா " வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு   அமைவாக சாய்ந்தமருது பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பூங்காவினை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  அபூபக்கர் ஆதம்பாவா இணைந்து  திறந்து வைத்தனர்.

நேற்று மக்கள் பாவனைக்காக  திறந்து வைக்கப்பட்டு   மாநகர சபைக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட இந்நிகழ்வில்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கிழக்கு மாகாண கரையோ பாதுகாப்புத் திணைக்கள பொறியியாளர் எம்.துலஷிதாஸன், கல்முனை மாநகர ஆணையாளர் ரி.எம். றாபி  மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தினுடைய உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தியினுடைய தவிசாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் உட்பட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சாய்ந்தமருதுவில் பசுமையான கடற்கரை பூங்கா திறப்பு அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா " வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு   அமைவாக சாய்ந்தமருது பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.1 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பூங்காவினை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  அபூபக்கர் ஆதம்பாவா இணைந்து  திறந்து வைத்தனர்.நேற்று மக்கள் பாவனைக்காக  திறந்து வைக்கப்பட்டு   மாநகர சபைக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட இந்நிகழ்வில்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கிழக்கு மாகாண கரையோ பாதுகாப்புத் திணைக்கள பொறியியாளர் எம்.துலஷிதாஸன், கல்முனை மாநகர ஆணையாளர் ரி.எம். றாபி  மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தினுடைய உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தியினுடைய தவிசாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் உட்பட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement