• Jun 03 2025

தென்னைச் செய்கையாளர்களுக்கு இலவசமாக மானியப் பசளை விநியோகம்

Chithra / Jun 1st 2025, 12:46 pm
image


தென்னைச் செய்கையை ஊக்குவிப்பதற்காக, நாடளாவிய ரீதியிலுள்ள தென்னைச் செய்கையாளர்களுக்கு  தென்னை பயிற்செய்கை சபையினால் இலவசமாக மானியப் பசளை விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், மூதூர் தென்னை பயிர்ச்செய்கை நிலையத்தின் கீழுள்ள மூதூர், தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 72 தென்னைச் செய்கையாளர்களுக்கு முதற்கட்டமாக இன்று மானியப் பசளை விநியோகிக்கப்பட்டது.

தோப்பூர் கமநல சேவை நிலையத்தில் வைத்து இவ் பசளை விநியோகம் இடம்பெற்றது.

விவசாய போதனாசிரியர் சி.புவனேஸ்வரன், மூதூர் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.சிபான்,

தோப்பூர் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மூதூர் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டு பசளை மானியங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


தென்னைச் செய்கையாளர்களுக்கு இலவசமாக மானியப் பசளை விநியோகம் தென்னைச் செய்கையை ஊக்குவிப்பதற்காக, நாடளாவிய ரீதியிலுள்ள தென்னைச் செய்கையாளர்களுக்கு  தென்னை பயிற்செய்கை சபையினால் இலவசமாக மானியப் பசளை விநியோகிக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில், மூதூர் தென்னை பயிர்ச்செய்கை நிலையத்தின் கீழுள்ள மூதூர், தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 72 தென்னைச் செய்கையாளர்களுக்கு முதற்கட்டமாக இன்று மானியப் பசளை விநியோகிக்கப்பட்டது.தோப்பூர் கமநல சேவை நிலையத்தில் வைத்து இவ் பசளை விநியோகம் இடம்பெற்றது.விவசாய போதனாசிரியர் சி.புவனேஸ்வரன், மூதூர் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.சிபான்,தோப்பூர் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மூதூர் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டு பசளை மானியங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement