நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட நோயாளிகளுக்கு வைத்தியர் ஒருவர் ஜிப்லைனில் சென்று சிகிச்சையளித்த செயல் தற்போது வைரலாகி வருகின்றது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு வைத்தியர் இர்பான் மோல்லா சென்றார்.
பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததால் குறித்த வைத்தியரால் அங்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து வைத்தியர் அங்கு சென்றார். அதன்பின் காயமடைந்திருந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கினார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உயிரை துச்சமென மதித்து துணிச்சலுடன் ஜிப்லைனில் சென்று சிகிச்சை வழங்கிய மருத்துவரின் சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நிலச்சரிவில் சிக்கிய நோயாளிகள்; ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளித்த வைத்தியர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட நோயாளிகளுக்கு வைத்தியர் ஒருவர் ஜிப்லைனில் சென்று சிகிச்சையளித்த செயல் தற்போது வைரலாகி வருகின்றது. மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு வைத்தியர் இர்பான் மோல்லா சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததால் குறித்த வைத்தியரால் அங்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து வைத்தியர் அங்கு சென்றார். அதன்பின் காயமடைந்திருந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கினார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உயிரை துச்சமென மதித்து துணிச்சலுடன் ஜிப்லைனில் சென்று சிகிச்சை வழங்கிய மருத்துவரின் சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.