யாழ்ப்பாணம் - புத்தூர் - வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றுமுன்தினம் உயிர்மாய்த்துள்ளார்.
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய லோகவேந்தன் றுகிந்தா என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில்
யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இளவாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய அரிச்சந்திரன் வினோதா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு கடன் கொடுத்தவர்களால் தொல்லை ஏற்பட்டுள்ளது.
கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் அவர் உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
கடன் தொல்லை; மன அழுத்தம் - யாழில் உயிரை மாய்த்த இளம் பெண்கள் யாழ்ப்பாணம் - புத்தூர் - வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றுமுன்தினம் உயிர்மாய்த்துள்ளார்.கிளிநொச்சி - முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய லோகவேந்தன் றுகிந்தா என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய அரிச்சந்திரன் வினோதா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு கடன் கொடுத்தவர்களால் தொல்லை ஏற்பட்டுள்ளது.கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் அவர் உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.