• Jun 15 2025

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Sharmi / Jun 13th 2025, 5:11 pm
image

தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு 156 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI379 விமானம் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து புதுடெல்லியை நோக்கி புறப்பட்டது. 

இதன்போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தாய்லாந்தில்  குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

அவசரகால திட்டங்களின்படி, AI 379 விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் ”ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாக  தெரியவருகின்றது.

ஏற்கனவே, அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நேற்றையதினம் பிற்பகல் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த ஒரு நாள் கழித்து இந்த வெடி குண்டு மிரட்டல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை 9:30 மணிக்கு 156 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI379 விமானம் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து புதுடெல்லியை நோக்கி புறப்பட்டது. இதன்போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தாய்லாந்தில்  குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,அவசரகால திட்டங்களின்படி, AI 379 விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் ”ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாக  தெரியவருகின்றது.ஏற்கனவே, அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நேற்றையதினம் பிற்பகல் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த ஒரு நாள் கழித்து இந்த வெடி குண்டு மிரட்டல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement