• Jun 14 2025

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சுதாகரன் தெரிவு..!

Sharmi / Jun 13th 2025, 3:19 pm
image

மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச சபை மண்டபத்தில் இன்று காலை (13) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.முகமட் அஸ்மி தலைமையில் சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

பிரதி தவிசாளராக அதே கட்சியை சேர்ந்த குழந்தைவேல் பத்மநீதன் தெரிவு செய்யப்பட்டார்.

இன்றைய தவிசாளர் தெரிவின் போது மேற்படி தமிழரசு கட்சியில் தவிசாளராக மற்றும் பிரதிதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டவர்களான தனபால் நிர்மலன் என்பவர் தவிசாளராகவும் பிரதி தவிசாளராக நவராஜலிங்கம் நிமல்ராஜ் என்பவர்களது பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பிற்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் பூரண சம்மதம் தெரிவித்ததையடுத்து தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

இதன்படி 15 வாக்குகள் பெற்று தமிழரசு கட்சியின் தவிசாளராக  சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக  குழந்தைவேல் பத்மநீதன் ஆகியோர்கள்  தெரிவு செய்யப்பட்டனர்.

இத் தெரிவின் போது தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 07 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

26 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று பிரதேச சபையில் 10 உறுப்பினர்களை மாத்திரமே இலங்கை தமிழரசு கட்சி பெற்றிருந்தது.

இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியை இன்று கைப்பற்றியது.

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய மக்கள் சக்தி, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் தலா-04 பேரும் ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் தலா-03 பேரும் ஜனநாயக தமிழ் கூட்டமைப்பு சார்பில்- 01 வரும் என ஏனைய கட்சிகளில் உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.

சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்கள் தெரிவு நடைபெற்ற வேளை நாடளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன் முன்னாள் கிழக்கு மாகன சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தவிசாளருமான நா.திரவியம்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் பொதுமக்கள் என பலரும் பார்வையாளர்களாக வருகை தந்திருந்தனர்.


கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சுதாகரன் தெரிவு. மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பிரதேச சபை மண்டபத்தில் இன்று காலை (13) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.முகமட் அஸ்மி தலைமையில் சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு நடைபெற்றது.பிரதி தவிசாளராக அதே கட்சியை சேர்ந்த குழந்தைவேல் பத்மநீதன் தெரிவு செய்யப்பட்டார்.இன்றைய தவிசாளர் தெரிவின் போது மேற்படி தமிழரசு கட்சியில் தவிசாளராக மற்றும் பிரதிதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டவர்களான தனபால் நிர்மலன் என்பவர் தவிசாளராகவும் பிரதி தவிசாளராக நவராஜலிங்கம் நிமல்ராஜ் என்பவர்களது பெயர்கள் முன்மொழியப்பட்டன.இதன்போது பகிரங்க வாக்கெடுப்பிற்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் பூரண சம்மதம் தெரிவித்ததையடுத்து தவிசாளர் தெரிவு நடைபெற்றது.இதன்படி 15 வாக்குகள் பெற்று தமிழரசு கட்சியின் தவிசாளராக  சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக  குழந்தைவேல் பத்மநீதன் ஆகியோர்கள்  தெரிவு செய்யப்பட்டனர்.இத் தெரிவின் போது தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 07 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.26 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று பிரதேச சபையில் 10 உறுப்பினர்களை மாத்திரமே இலங்கை தமிழரசு கட்சி பெற்றிருந்தது.இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியை இன்று கைப்பற்றியது.கோறளைப்பற்று பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய மக்கள் சக்தி, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் தலா-04 பேரும் ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் தலா-03 பேரும் ஜனநாயக தமிழ் கூட்டமைப்பு சார்பில்- 01 வரும் என ஏனைய கட்சிகளில் உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்கள் தெரிவு நடைபெற்ற வேளை நாடளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன் முன்னாள் கிழக்கு மாகன சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தவிசாளருமான நா.திரவியம்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் பொதுமக்கள் என பலரும் பார்வையாளர்களாக வருகை தந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement