கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு திடீரென வெடித்துள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு; ஆபத்தான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு திடீரென வெடித்துள்ளது.இதன் போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.