பண்டாரகம பகுதியில் கெப் வாகனத்தின் கதவில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
மோட்டார் சைக்கிள் பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்தவர் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் பொகுணுவிட ஹங்ச உயன பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது கணவன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த கெப் வாகனத்திலிருந்த ஓய்வுபெற்ற இராணுவ விசேட தேவையுடைய சிப்பாயும் முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று (30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்ததால் நடந்த விபரீதம்; ஓய்வுபெற்ற ஆசிரியை மரணம் பண்டாரகம பகுதியில் கெப் வாகனத்தின் கதவில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் மோட்டார் சைக்கிள் பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்தவர் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயரிழந்துள்ளார்.இவ்விபத்தில் பொகுணுவிட ஹங்ச உயன பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது கணவன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.குறித்த கெப் வாகனத்திலிருந்த ஓய்வுபெற்ற இராணுவ விசேட தேவையுடைய சிப்பாயும் முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் இன்று (30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.