ஒரு நாளைக்கு காஃபின் கலந்த காபி அல்லது தேநீர் அருந்துவது டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என புதிய சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட 1.32 இலட்சம் ஆரோக்கியமான பெரியவர்கள் பங்கேற்ற நீண்டகால ஆய்வின் அடிப்படையில், தினமும் 2–3 கப் காஃபின் கலந்த காபி அல்லது 1–2 கப் தேநீர் அருந்துபவர்களுக்கு, டிமென்ஷியா ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அமெரிக்க மருத்துவ சங்கத்தின் (JAMA) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
“காபி குடிக்காதவர்கள் கட்டாயமாக தொடங்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் ஏற்கனவே காபி அல்லது தேநீர் அருந்துபவர்களுக்கு இது உறுதியளிக்கும் முடிவாகும்,” என பாஸ்டனில் உள்ள மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவமனையின் ஆய்வு ஆசிரியர் டாக்டர் யூ ஜாங் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாக, டிகாஃப் (Decaffeinated) காபி இதே நரம்பியல் பாதுகாப்பு நன்மைகளை வழங்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
காஃபின் உள்ள பானங்களில் தான் அறிவாற்றல் பாதுகாப்பு விளைவுகள் அதிகம் காணப்பட்டுள்ளன.
1980 முதல் 2023 வரை நடைபெற்ற இந்த ஆய்வில், பெண்கள் மற்றும் ஆண்கள் அடங்கிய இரண்டு பெரிய சுகாதார ஆய்வு தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 37 ஆண்டுகள் பின்தொடரப்பட்ட நிலையில், 11,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா கண்டறியப்பட்டது.
அதிக அளவில் காஃபின் கலந்த காபி அருந்துபவர்களுக்கு 18%, தேநீர் அருந்துபவர்களுக்கு 14% வரை டிமென்ஷியா அபாயம் குறைந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த விளைவு 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் மேலும் வலுவாக இருந்தது.
இருப்பினும், டிமென்ஷியாவை காபி அல்லது தேநீர் மட்டும் முழுமையாகத் தடுக்க முடியாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
“இது ஒரு மாய தீர்வு அல்ல. வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, போதிய தூக்கம், புகைபிடிக்காத பழக்கம் மற்றும் அறிவாற்றல் ஈடுபாடு ஆகியவை முக்கியமானவை,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, 2021ஆம் ஆண்டு உலகளவில் 5.7 கோடி பேர் டிமென்ஷியாவுடன் வாழ்ந்துள்ளனர், இதில் அல்சைமர் நோய் மிக பொதுவானதாகும்.
ஒரு நாளைக்கு ஒரு கப் காபி: டிமென்ஷியா அபாயம் குறையும் ஒரு நாளைக்கு காஃபின் கலந்த காபி அல்லது தேநீர் அருந்துவது டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என புதிய சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.கிட்டத்தட்ட 1.32 இலட்சம் ஆரோக்கியமான பெரியவர்கள் பங்கேற்ற நீண்டகால ஆய்வின் அடிப்படையில், தினமும் 2–3 கப் காஃபின் கலந்த காபி அல்லது 1–2 கப் தேநீர் அருந்துபவர்களுக்கு, டிமென்ஷியா ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அமெரிக்க மருத்துவ சங்கத்தின் (JAMA) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.“காபி குடிக்காதவர்கள் கட்டாயமாக தொடங்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் ஏற்கனவே காபி அல்லது தேநீர் அருந்துபவர்களுக்கு இது உறுதியளிக்கும் முடிவாகும்,” என பாஸ்டனில் உள்ள மாஸ் ஜெனரல் பிரிகாம் மருத்துவமனையின் ஆய்வு ஆசிரியர் டாக்டர் யூ ஜாங் தெரிவித்துள்ளார்.ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாக, டிகாஃப் (Decaffeinated) காபி இதே நரம்பியல் பாதுகாப்பு நன்மைகளை வழங்கவில்லை என கூறப்பட்டுள்ளது. காஃபின் உள்ள பானங்களில் தான் அறிவாற்றல் பாதுகாப்பு விளைவுகள் அதிகம் காணப்பட்டுள்ளன.1980 முதல் 2023 வரை நடைபெற்ற இந்த ஆய்வில், பெண்கள் மற்றும் ஆண்கள் அடங்கிய இரண்டு பெரிய சுகாதார ஆய்வு தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.சுமார் 37 ஆண்டுகள் பின்தொடரப்பட்ட நிலையில், 11,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா கண்டறியப்பட்டது.அதிக அளவில் காஃபின் கலந்த காபி அருந்துபவர்களுக்கு 18%, தேநீர் அருந்துபவர்களுக்கு 14% வரை டிமென்ஷியா அபாயம் குறைந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.இந்த விளைவு 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் மேலும் வலுவாக இருந்தது.இருப்பினும், டிமென்ஷியாவை காபி அல்லது தேநீர் மட்டும் முழுமையாகத் தடுக்க முடியாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.“இது ஒரு மாய தீர்வு அல்ல. வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, போதிய தூக்கம், புகைபிடிக்காத பழக்கம் மற்றும் அறிவாற்றல் ஈடுபாடு ஆகியவை முக்கியமானவை,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, 2021ஆம் ஆண்டு உலகளவில் 5.7 கோடி பேர் டிமென்ஷியாவுடன் வாழ்ந்துள்ளனர், இதில் அல்சைமர் நோய் மிக பொதுவானதாகும்.