கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அநுராதபுரம் - ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில்
நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், அங்கமுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 8 மாதங்களாக குறித்த பெண் தனது தாயார் வீட்டில் தனது மூத்த மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
அதே நேரத்தில் கணவர் தனது இளைய மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவர், மனைவியுடன் வசிக்கும் மூத்த மகனை ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே அடையாளம் தெரியாத நபரொருவரினால் குறித்த பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சம்பவத்டன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனைப் பிரிந்து தனியாக வசித்த பெண்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அநுராதபுரம் - ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர், அங்கமுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 8 மாதங்களாக குறித்த பெண் தனது தாயார் வீட்டில் தனது மூத்த மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.அதே நேரத்தில் கணவர் தனது இளைய மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவர், மனைவியுடன் வசிக்கும் மூத்த மகனை ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே அடையாளம் தெரியாத நபரொருவரினால் குறித்த பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதனையடுத்து சம்பவத்டன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.